Wednesday, February 13, 2013

PENN

பெண் ....!!!!
சென்ற  டிசம்பர்  மாதத்தில் .....
ஒரு  நாள் ...
அதிகாலை   நேரம் 
ஒரு  கனவு ....
கனவில்   ஒரு  
பெண்ணின்   விசும்பல் .....
''இந்தியா   ....
ஆடை  ஏற்றுமதியில் 
அதிகம்   பொருள் 
ஈட்டுகிறதாம் ....!!
சில  இந்தியர்களால் 
சிதைக்கப்பட்டு ..
நிர்வாணமாக  
தெருவில்   கிடக்கின்றேன் 
எத்தனை   இந்தியர் 
என்னை 
கடந்து   சென்றார்கள் ..!!
அத்தனை   பேருமே 
ஆடை  
அணிந்திருக்கவில்லையா ...!!
பின்  ......ஏன்...
ஏன்  மீது 
ஒரு  சிறு   துண்டையாவது 
வீசி  விட்டுச்   செல்ல 
ஒரு  இந்தியருக்கும் 
மனம்   இல்லை..!!!
என்  மானத்தை  
இவர்களும்    சேர்ந்து 
பங்கப்  படுத்தி விட்டார்களே .....!!!''
விழித்துக்   கொண்டேன் ...
மனம்  நொந்து 
திரும்பிப்  பார்க்கின்றேன் 
கணக்கற்ற   பெண்கள் ...
வயது  வரம்பின்றி 
அதே   விசும்பலுடன் .....!!!
         

No comments:

Post a Comment